Menaga

இன்று நான்

​விண்மீனைக்  கண்டும்  வியக்கவில்லை,

வெண்பனியில்  நின்றும்  குளிரவில்லை,

வேம்புக்கு  தேன்  மருந்தானதே,

என்  கண்ணீருக்கு  என்  புன்னகை  வேலி  போட்டதே,

நீரும்  நெருப்பும்  சேர்ந்திடுமோ,

இரவும்  பகலும்  ஒன்றாகுமோ ,

விடைகளைத்  தேடி  அலைகிறேன்..

வினாக்கள்  என்னவென்று  அறியாமலே.....!!!