Menaga

உணர்வுகள்

​காலைப் பொழுதில் காக்கையின் சத்தம்,

மாலைப் பொழுதில் சூரியனின் அழகு,

மழையின் முன் வரும் மண்வாசனை,

அந்த மழலையின் புன்னகை,

மூதாட்டியின் புலம்பல் மொழி,

இரவில் நிலவொளி,

கார் காலத்தின் கருமேகம்,

வெள்ளை பூவின் உயிர் வாசம்,

நதியின் நீர் ஓட்டம்,

அலை கடலின் படர்ந்த தோற்றம் ,

எத்தனை அழகு...

என் மனம் என்னை மறந்து...

இந்த உணர்வுகளுடன் கலந்ததோ ?!