Menaga

பேதையின் சொற்கள்...

​உறக்கம் இல்லா இரவுகளில்

முடிவில்லா பாடல்கள்..

நிழலை விழுங்கும் நிலவின் ஒளியில்

ஒளியை தேடும் குருட்டுக் கண்கள்..

கண்ணீர் உடன் தலையணை

போடும் ஓய்வில்லா சண்டைகள்..

எல்லாம் முடிந்த பிறகு விடியும்

பொழுதில் போர் முழக்கங்கள்..

விடியல் இல்லா பொழுதுகள்..

விடை தேடும் மனம் அது 

குழப்பங்களில் தொலைந்து போனது ....